புதன், 21 டிசம்பர், 2016

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக மாணவிகள்.!!

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த  தமிழக மாணவிகளை கண்டுகொள்ளாத ஊடகங்களும்.!!

எந்த பொறுப்பும் ஏற்காத சசிகலாவுக்காக குரல்கொடுக்கும் தமிழக அமைச்சர்களும்.!!


சென்னை : 22,டிசம்பர்,2016
 
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் பிரியதர்சினி ,ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சென்னை திரும்பினர்.

சீனாவின் விவான் நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த #தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், #ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி #ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சாதனை மாணவிகளை நாம் வாழ்த்துவோம்..!!

வாழ்த்துக்களுடன் :
                               தேர்போகி விஜய்

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக மாணவிகள்.!!

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த  தமிழக மாணவிகளை
கண்டுகொள்ளாத ஊடகங்களும்.!!

எந்த பொறுப்பும் ஏற்காத சசிகலாவுக்காக குரல்கொடுக்கும் தமிழக அமைச்சர்களும்.!!

சென்னை : 22,டிசம்பர்,2016
 
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் பிரியதர்சினி ,ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சென்னை திரும்பினர்.

சீனாவின் விவான் நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த #தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், #ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி #ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சாதனை மாணவிகளை நாம் வாழ்த்துவோம்..!!

வாழ்த்துக்களுடன் :
                               தேர்போகி விஜய்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

அன்பான என் ஆயர்குலத்திர்க்கு வணக்கம்🙏🙏


 சகோதர, சகோதரிகளே நாம்  ஜாதி சான்றிதழில் மட்டும் யாதவ் என்று போட்டு கொண்டால் போதுமா? முடிந்த வரையில் இனி வரும் தலைமுறை நமது அடுத்த சந்ததிகளுக்கு பெயர் வைக்கும் போது எடுத்துகாட்டாக

கேசவ கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்
யது கிருஷ்ணன்
யாதவ கிருஷ்ணன்
வருன் கிருஷ்ணன்

கோகுல கண்ணன்
ரமேஷ் கண்ணன்
ராஜேஸ் கண்ணன்

நம் குழந்தைகள் பெயருக்கு பக்கத்தில் கிருஷ்ணன் or கண்ணன் என்று பார்த்து வைக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்.

இந்தியாவில் பொதுவாக உயர்ந்த சமுதாயம் யார் என்று கேட்டால் ஐய்யர் என்று சொல்வார்கள், சரி அப்படியே வைத்து கொள்வோம் அந்த ஐய்யர் வீட்டு பூஜை அறை யில் போய் பாருங்கள் கிருஷ்ணன் இருப்பார்,யார் இந்த கிருஷ்ணன் ஒரு இடையன், அப்படியென்றால் இடையன் யார்? இந்த கேள்வியே உங்களிடமே விட்டு விடுகிரேன்.

நாங்கள்தான் ஆண்ட இனம் என்று பீத்திகொள்ளும் சமுதாயங்கள் 17 ம் நூட்றாண்டுக்கு முன் இவர்களின் வரலாறு என்னெவென்று கேலுங்கள் அவர்களுக்கே தெரியாது, ஆனல் உன் முப்பாடன் ஆனந்தகோன் 11 ம் நூட்றாண்டில் செஞ்சியே கட்டி ஆண்டவன் 1100ல் இருந்து 300 வருடங்கள் கோனார் ஆண்டுள்ளார்கள் அதர்க்கு செஞ்சிகோட்டயே சான்று.

நீ ஒளவைக்கு அர்புத கனி கொடுத்த அதியமானின் பரம்பரை.

பாண்டியனின் வம்சம் நீ, அதை நான் சொல்லவில்லை, இந்த உலகத்திர்க்கு மகா பாரதம் தந்த வீயச மாமுனிவரின் எழுத்துக்கள் செல்கிறது, பாண்டியன் சந்திர வம்சத்தை சேர்ந்தவன் என்பதற்கு வியாச மாமுனிவரே சான்று.

கம்பனின் ராமயனத்தில் சாரா நதியே பட்றி குறிப்பிடும் போது, அந்த நதியில் இடைச்சிகளின் ஆடைகள் அடித்து செல்லபட்டது என்று சாரா நதியே வர்னித்து இருப்பார். ஆக ராமாயண காலத்திலே இடையன் வாழ்ந்திருக்கிரான் என்பதற்கு கம்பனே சான்று.

5 நிலத்தில் வாழ்ந்த எவருக்கும் அரசன் என்கிற பட்டம் உன்னை தவிர யாருக்கும் இல்லை, என்ன புரியவில்லையா முல்லை நிலத்தில் வாழ்ந்த உனக்குதான் "கோன்' இதர்க்கு தமிழில் அரசன் என்று பொருள்.

கோவலன் அவரின் மனைவி கன்னகியே ஒரு இடையர் வீட்டில்தான் தங்கவைத்துவிட்டு வெளியில் சென்றார்.

ஏறுதழுவல் உன்னுடைய விளையாட்டு நான் சொல்லவில்லை, கலி தொகை சொல்கிறது.

கடை ஏழு வள்ளல்கள்:
பேகன்
பாரி
காரி
ஆய்
அதிகன்
நள்ளி
ஓரி
       யார் இவர்கள் உன் பரம்பரையே சேர்ந்தவர்கள்தான் இவர்களும்.

ஆநந்தரங்க பிள்ளை முதன் முதலில் கப்பல் ஓட்டிய தமிழன், ஒரு இடையன் என்பதற்காக அது மறைக்கப்பட்ட கொடுமை.

ஆநாந்தகோன் - செஞ்சிகோட்டையே கட்டியவர்
கிருஷ்ணகோன்- கிருஷ்ணகிரி கோட்டையே கட்டியவர்,
                   யாருக்காவது தெரியுமா இந்த மாமன்னர்களை பட்றி 17ம் நூட்றாண்டுக்கு பின் வந்தவர்களை புகழ் பாடும் இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு ஏன் இடையன் மீது இவ்வளவு ஏட்றதாழ்வு என்பது இதுவரை புரியாத புதிர்தான்.

ஒளரங்கசீப்பை ஓட ஓட விரட்டி அடித்தவன் நம் வீர சிவாஜி, மராட்டிய தலைவன்.

ஹரி இந்த உலகத்தை படைத்தார்
ஹரி பிரம்மனை படைத்தார்

பிரம்மன் ஏழு ரிஷிகலே படைத்தார்
அதில் ஒருவர்தான் சந்திரன்.

இந்த சந்திர வம்சத்தில் வந்தவர்கள்தான் யாதவர்கள், என்ன புரியவில்லையா விளக்கம் தருகிரேன் பொருமையாக படியுங்கள்,

சந்திரனுக்கு, தட்சன் தனது 60 மகள்களில் 27 மகள்களெ சந்திரனுக்கு கட்டி கொடுத்தார், திருவாதிரை
ரோகினி
மூலம்
புனர்பூசம்
இது போன்ற 27 நட்சத்திரங்கள் சந்திரனுக்கு கட்டி வைக்கப்பட்டது.
இதில் சந்திரன் அன்பாக இருந்தது ரோன்கினி நட்சத்திரதிடம்தான்.

தேவர்களின் குல குருவான பிரகஸ்பதி யின் மனைவி தாரை யின் அழகில் சந்திரன் மயங்கி, தாரையே தூக்கி சென்று விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த பிரகஸ்பதி பிரம்மனிடம் முறையிட்டார், சந்திரன் அசுர குலகுருவான சுக்ராச்சாரியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிறகு பிரம்மன் தலையிட்டு தாரையே மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார், அப்போது சந்திரனின் கரு தாரையின் வயிட்றில் இருந்தது, அதனால் தாரையே பிரகஸ்பதி ஏட்றுகொல்லவில்லை.

சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த மகன் புதன்.

புதனுக்கும் இலை என்கிர பென்னுக்கும் பிறந்தவர் தான் ஆயூஸ் மன்னன்

ஆயூ மன்னனுக்கு பிறந்தவர்தான் புரூருவஸ்.

புரூருவஸ்க்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்தான் நகுசன்

நகுசனுக்கு 5 பிள்ளைகள் அதில் மூத்தவர்தான் யயாதி

யயாதியின் மூத்த மனைவி தேவையானிக்கும் பிறந்தவர்கள்தான்

# யது ( நம் முப்பாட்டன்)

# துர்வசு (  சின்ன முப்பாட்டன்)

யயாதியின் இரண்டாவது மனைவி சர்மிஸ்டை இவலுக்கு மூன்று மகன்கள்

# திரஹ்யூ

# அனூ

# புரு

யாயாதி மன்னனுக்கு இளைமை தேவையானியின் தந்தை சுக்ராசாரியரால் பரிபோகிரது
விமோச்சனம் என்ன என்று கேட்டதர்க்கு உன் மைந்தர்கள் யார் இளைமையே தருகிரார்கலோ நீ பெட்று கொல்லலாம் என்றார் சுக்ராசாரியார். என்ன காரனம் என்றால் தன் மகளுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமையால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இளமையே எல்லா மைந்தர்களும் மருத்துவிட கடேசி மைந்தன் புருவாள் கிடைகிரது, அதனால் அரசாட்சி யது, துர்வசுக்கு மருக்கபட்டு புருவுக்கு நாடு வழங்கபட்டது.

புரு மன்னனுக்கு பிறகு வந்தவர்கள்

ஜனனேஜெயன்
பிரசாவன்
சாயதி
திடன்
நீலன்

துஷ்யந்தன்-சகுந்தலை (இவள் ஒரு யாதவ பென்)
பரதன்
பெளமன்
சுகேத்திரன்
அஸ்தன்-அஸ்தினா புரம் என்று பெயர் வரக் காரனமாய் இருந்தவன்.

நிகும்பன்
அரசமீளி
வருணன்
குரு- இவர்தான் கெளரவர்கள் என்கிர பட்டத்தை வாங்கியவர்.

பிரதீபன்

சந்தனு

பீஸ்மர்

சித்திர வீரியன்

          1.திருதிராஷ்டன்
         
           2.பாண்டு

திருதிராஸ்டனின் மைந்தர்கள் துரியோதனன் என்கிர இடையன்.
 எப்படி இடையன் ஆக முடியும் என்ற சந்தேகமா?

திருதிராஷ்டனின் மனைவி காந்தாரி
யார் அந்த காந்தாரி??

யதுவின் தம்பி துர்வசுவின் வழியில் வந்தவல்தான் இந்த காந்தாரி.

பாண்டுவின் மைந்தர்கள்

1.தர்மன்
2.பீமன்
3.அர்ச்சுனன்
4.நகுலன்
5.சகாதேவன்

     இவர்களும் யாதவர்கள்தான், என்ன சந்தேகமா???

பாண்டுவின் மனைவி குந்தி யார் என்று தெரியுமா???

மூத்த மகன் யதுவின் வம்சத்தில் பிறந்தவள்தான் இந்த குந்தி.

  மூத்த மகன் யதுவுக்கு பட்டத்தையும் பதவியயும் வாங்கி கொடுக்கவே கிருஷ்ணன் யது குலத்தில் யாதாவனாக அவதரித்தார்.

பாராத போருக்கு பின் காந்தாரி சாபத்தல் யதவர் இனமே முலுமையாக அழிந்து போனது.

ஒரு நாள் மேலிருந்து கீழாக கிருஷ்ணன் பார்த்தார், கங்கை, யமுனையுடன் சேர்ந்து கன்னீர் நதியும் ஓடியது,
திகைத்தி போன கிருஷ்ணன் கீழே வந்தி பூம தேவியுடன் கேள்வி கேட்டார், அதர்க்கு பூமி அன்னை சென்ன பதில் ' பிரபுவே இந்த பாவ லோகத்தில் இந்த பாவியர்கலை என்னால் சுமக்க முடியவில்லை, யாதவர்களின் கால் தடங்கள் திரும்ப பட்டால்தாந் இது மோட்சம் அடையும் என்று பூமி அன்நை சொல்ல உடனே 9 இடங்களில் ஆயர் இனம் அவதரிக்கப்பட்ட்து.

இடையனே இடையனே உன் வரலாறு இது

கேட்டு விட்டு திகைத்து விடாதே.

மனிதனாய் பிறப்பது எளிது ஆனால் யாதவராய் பிறப்பது அரிது.
யாவரும்  வாழட்டும் யாதவரே ஆளட்டும்.
வாழ்க யாதவம், வழர்க பாரதம்.

*அன்பு யாதவ உறவுகளுக்கு வணக்கம்.!!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமாக நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறோம்.மேலூரில் மற்றஎல்லாச் சமூகத்தினருக்கும் திருமண மண்டபம் உள்ளது. நம் *யாதவ* சமுதாயத்திற்கென்று மண்டபம் இல்லை. பெருவாரியான மக்களாக வசிக்கும் நமக்கு நம் இனத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் வகையில் மண்டபம் இல்லாதது உண்மையில் அனைவருக்குமே மனவருத்தத்தை அளிக்கக்கூடிய விசயமாகவே இருக்கிறது.நம் சொந்தங்கள் எத்தனையோ பேர்கள் அரசுப் பணிகளிலும்,தனியார் நிறுவனங்களிலும்,சொந்தமாக தொழில் செய்பவர்களாகவும்,பொருளாதார ரீதியில் ஓரளவுக்கு முன்னேறிய நிலையிலேயே இருக்கிறோம்.நாம் நினைத்தால் மண்டபம் கட்டும் பணியை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும். இந்தப் பணியை *மேலூர் தாலுகா யாதவர் இளைஞர் நலச் சங்கம்* கையில் எடுத்திருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமில்லாமல், வெளி நாடுகளிலிருந்தும் தாராளமாக நிதியுதவியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்டபம் கட்டும் பணிக்கு *ஒரு கோடி ரூபாய்* மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. நன்கொடையாக ரூபாய் ஐயாயிரமும்(₹5000/) அதற்கு மேலும் வழங்குபவர்களின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும். ரூபாய் ஒரு லட்சம்(₹100000/)வழங்குபவர்களின் புகைப்படம் மண்டபத்தில் வைக்கப்படும்.
அதேபோல் பணமாக மட்டுமில்லாமல் கட்டிடப் பணிக்குத் தேவையான பொருட்களாகவும் வழங்கலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் உதவியையும் மேலூர் தாலுகா யாதவர் இளைஞர் நலச் சங்கம் எதிர்நோக்கியுள்ளது. உங்களின் மேலான ஆதரவு எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நமக்காகவும்,நமது நாளைய சந்ததிகளுக்காகவும் தொலைநோக்குப் பார்வையோடு நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்களது பங்களிப்பை இயன்ற அளவு வாரி வழங்குமாறு உங்களின் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறோம்....

என்றும் சமுதாயப் பணியில்.....
*மேலூர் தாலுகா யாதவர்  இளைஞர் நலச் சங்கம்*

*தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்* :
+91 9094391800
+91 9585737309

வியாழன், 1 டிசம்பர், 2016

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை.!!!

Posted By | நாட்டு நடப்பு | 2/12/2016



அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர், கே.ஆர். ஸ்ரீதர்.

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

 செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.

முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.

 அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

 தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர்.

சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் . இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

#தேர்போகி விஜய்

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் திடுக் நடுக் தகவல்கள்!!


ஜெயலலிதா உடல் நலம் பற்றி பகீர் கிளப்புகிறார்.. அப்போலோ தலைவர் ரெட்டி..!!!


வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…


பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதற்கு அப்போலோ மருத்துவமனையே சாட்சி…!மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா அட்மிட் ஆகி 60 நாட்கள் ஆகிவிட்டது.

பொது நோயாளிகளின் வரவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் ஏகப்பட்ட  நஷ்டம்..!

முதல்வர் குணமாகியும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் மருத்துவமனை தலைவர் ரெட்டிக்கு உண்டு..!

இது துகுறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர்,
முதல்வர் நிலைக்குறித்து மனம் திறக்கிறார்.

வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…