வெள்ளி, 25 நவம்பர், 2016

மும்பையில் 10 மாத குழந்தையை காலால் பந்தாடிய பள்ளி பராமரிப்பாளர் - அதிர்ச்சி வீடியோ.!!



மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- கடந்த 21 ஆம் ததேதியன்று மும்பையில் உள்ள இந்த பள்ளியில் பணியாற்றும் அப்சனா என்ற குழந்தை பராமரிப்பாளர், 10 மாத குழந்தையை காலால் மிதித்தும், பந்தை வீசுவது போன்று தரையில் குழந்தையை வீசியுள்ளார்.

இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்ட பெற்றோர் அன்று மாலை போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிரா பதிவை ஆய்வு செய்த மேற்கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பள்ளி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது என்றும் அப்சனா என்ற கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக