வியாழன், 17 நவம்பர், 2016

மனிதநேயம் ..!!

த்ரீ ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்கார வீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,  ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும்னு கேட்க,  அதுக்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும்னு சொல்ல, பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி ஊட்டுனாங்க .

ஒருநாள் சுற்றி பார்த்து விட்டு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால், ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினாங்க . பிறகு பால் எவ்வளவுன்னு டீ கடைக்காரரிடம் கேட்க,  டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லைனு சிரித்த முகத்தோட பதில் அளிச்சாராம் .

பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரன் அல்ல. அதை கொடுக்க நினைப்பவனே பணக்காரன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக