சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நீரின்றி காய்ந்து கருகும் பாக்கு மரங்களை, விவசாயிகள் அடியோடு வெட்டி வீழ்த்தும் அவலம் தொடர்கிறது.
தமிழகம் முழுவதும் 5400 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் பத்தாயிரம் மெட்ரிக் டன் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் சேலம், கோவை மாவட்டங்களில் மட்டும் 40 சதவீதம் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பாக்கு மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், இந்த பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் நீரின்றி காய்ந்து போன பாக்கு மரங்களை விவசாயிகள் வெட்டி வீழ்த்தி வருகின்றனர். இதனையடுத்து கருகிப்போன பாக்கு மரங்களை கணக்கீட்டு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக