வியாழன், 17 நவம்பர், 2016

டென்மார்க் நாட்டின் முதல் தமிழ் பெண் விமானி!!

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானி அர்ச்சனா செல்லத்துரை.!!

தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.

முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.

பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.

நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும் மறைந்துள்ளது.

பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.காணொளி தொகுப்பு..

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக