உலகின் பலமிக்க நாடுகளுக்கு இடையில் விண்வெளியை வெல்வது தொடர்பாக கடும் போட்டி நிலவி வருகிறது.
ரஷ்யா தான் முதலில் விண்வெளியில் தடம்பதித்தது என்பதும், அமெரிக்கா முதலில் நிலவில் கால்பதித்தது என்பதும் ரகசியமான விஷயமல்ல.
ஆனால், தமது நாட்டில் வாழும் மக்களை உலகை விட்டு வேறு கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு நாடு ஈடுபட்டுள்ளது என்ற ரகசியத்தை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
நம்புவது கடினம் தான், ஆனால் இது உண்மை, அது வேறு எந்த நாடும் அல்ல, அமெரிக்கா தான்.
வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது உரையாற்றிய பென்டகன் என்றழைக்கப்படும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் விண்வெளி தொடர்பான உதவி செயலாளர் Winston Beauchap அமெரிக்க மக்களை பூமிக்கு வெளியில் வேறு கிரகத்திற்கு கொண்டு செல்ல அமெரிக்க திட்டமிட்டு வருவதாக கூறினார்.
உலகில் தற்போது காணப்படும் சுழ்நிலையால் பூமியை விட்டு வேறு ஒரு இடத்தை தேர்வு செய்ய அமெரிக்க தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் ஒழுக்கமற்ற அரசியல் முறை தொடர்பாக அமெரிக்கா கவலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பூமியை சுற்றி பயணித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான செயற்கைகோள்களின் உடைந்து போன பாகங்கள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது. இந்த விண்வெளியில் பயணிக்கும் விண் பொருட்கள் பூமிக்கு அழிவை ஏற்படுத்தக் கூடும் என தெரியவந்துள்ளது.
எப்படி இருந்தாலும் பூமியை சுற்றியுள்ள செயற்கை கோள்களின் உடைந்த பாகங்கள் காரணமாக மனிதன் வேறு உலகத்தை தேடும் முயற்சிக்கு தடை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட உதவி செயலாளர் Winston Beauchap, செயற்கைகோள்களை கணக்கிடுவதில் பல தவறுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
உண்மையான தகவல்களின் அடிப்படையில் பூமிக்கு அருகில் மனிதன் வாழக் கூடிய பல இடங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூமியில் தற்போது காணப்படும் சூழ்நிலையில் எந்த நாடாவது அமெரிக்காவின் செயற்கைக்கோளை தாக்கி அழித்தால், அமெரிக்கா செயலிழந்து மிக பெரிய அழிவு ஏற்படும் எனவும் Winston Beauchap தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக