உருக வைக்கும் வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவரை போலீஸார் நடுரோட்டில் அடித்து உதைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரீனா பகுதியில் தினேஷ் என்ற இராணுவ வீரர் தனது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் அவர்களுக்கு தெரிந்தவர்களை மட்டும் வரிசையில் நிற்க வைக்காமல் உள்ளே அனுப்பியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த இராணுவ வீரர் தினேஷ் இதனை கண்டித்து வங்கி முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷை போலீஸார் அடித்து உதைத்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து தினேஷ் அளித்த புகார் மீதும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது, இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக