செவ்வாய், 22 நவம்பர், 2016

மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.!!



பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

இது மிகவும் தவறான முடிவு என ஒரு சாராரும், கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள மிகச்சரியான முடிவு இது என இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது இந்த முடிவு குறித்து ரேட்டிங் அடிப்படையில் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும்,

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான தனது முடிவு குறித்து மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 இதற்காக NM App என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக